நடிகைகள் சினிமாவில் பிஸியாகிவிட்டால் திருமணம் பற்றி அந்த தருணம் யோசிக்கவே மாட்டார்கள்.
அப்படி சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருபவர் நிக்கி கல்ராணி.
இவர் முதன்முறையாக ஒரு பேட்டியில் தன்னுடைய காதலர் மற்றும் திருமணம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். ஆனால் அவரை பற்றி தற்போது கூற முடியாது.
நாங்கள் இருவரும் 3 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இப்போது ரசிகர்கள் யாராக இருப்பார் என குழம்பி வருகின்றனர்.