நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. ஒரு பிரபல துணி விற்பனை மால்கள் வைத்துள்ள நிறுவனம் சாய் பல்லவியை தங்கள் விளம்பரத்தில் நடிக்கவைக்க பேசியுள்ளது.
ஒரு வருடத்திற்கு ஒரு கோடி ருபாய் சம்பளம் தரவும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் சாய் பல்லவி நோ கூறிவிட்டாராம்.
இதற்குமுன்பே ஒரு அழகு சாதன நிறுவனம் fairness கிரீம் விளம்பரத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவிக்கு 2 கோடி கொடுக்க முன்வந்தாலும் அவர் நடிக்கவில்லை. வெள்ளை தான் அழகு என கூறுவதை ஏற்க முடியாது என சாய் பல்லவி வெளிப்படையாகவே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.