அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்த போது, அந்த மனிதர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ரொனால்ட் எனும் அந்த நபர் அமெரிக்க கடற்படையில் பணியாற்றி இருக்கிறார். விவகாரத்து ஆன அவர் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்திருக்கிறார். “முன்பெல்லாம் தினமும் பேசுவான். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவன் அழைப்பது நின்றுவிட்டது” என்கிறார் அந்த தாய்.
மகனின் சரியான வசிப்பிடம் தெரியாததால், இவர் பல்வேறு காவல் நிலையங்களில் மகனை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார். “என் மகன் எங்காவது வெளியூர் பயணம் சென்றிருக்கலாம் என்று காவல் அதிகாரிகள் கூறிவிட்டனர்” என்கிறார்.
இறந்த அந்த நபருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 51 வயது. “எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. என் மகன் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். ஏன் என் மகனை என்னை தவிர யாரும் தேடவில்லை. ஏன் இதுகுறித்து யாருக்கும் எதுவுமே தெரியவில்லை” என்று கேள்வி எழுப்புகிறார் இறந்த ரொனால்டின் தாய்.