தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலா.
ஏற்கெனவே திருமணம் ஆன இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார்.
அவரையும் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆர்த்தோ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஷர்மிலா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அட்மிட் ஆகும்படி கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க கூட யாரும் வரவில்லையாம்.
அனாதையாக அவர் அங்கு இருப்பதை பார்த்த சிலர் அவருக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.