பிக்பாஸ் 2வது சீசனில் நமக்கு சில செயல்களால் வில்லியாக காணப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா.
இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருந்தார்.
சில படங்களில் கூட கமிட்டாகி நடித்து வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவரது டுவிட்டர் பக்கத்தை ஹாக்கர்கள் ஹாக் செய்துள்ளனராம்.
ஆனால் தன்னுடைய குழு மூலம் சரி செய்துவிட்டதாக அவரே டுவிட்டரில் மீண்டும் பதிவு செய்துள்ளார்.