நடிகர் சிம்பு நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று இரவு ஒரு பிரபல கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பாட்டு பாடியும், நடனமாடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனையடுத்து பேசிய அவர் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு கொடுத்துவரும் அன்பு பற்றி உருக்கமாக பேசினார்.
அதில், ‘எனக்கு படங்கள் கிடைப்பதை தடுக்க ஒரு கூட்டமே வேலை செய்கிறது. நீங்கள் (ரசிகர்கள்) இப்படி எனக்கு அன்பு கொடுத்தால் அவங்களுக்கு காண்டாகுமே. சிம்பு ரசிகன்னு பசங்க சொன்னா பொண்ணுங்க தைரியமா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க.
ஊரே என்னை கழுவி ஊற்றும் போது ‘என் தலைவன் திரும்ப வருவான்’னு எனக்கு ஆதரவா நிக்கிறான்னா, அவன் கட்டுன பொண்டாட்டிக்கும் லவ் பண்ற பொண்ணுக்காகவும் எப்படி நிப்பான்னு யோசிச்சு பாருங்க’ என கூறியுள்ளார்.