நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் பெரிய சர்ச்சையாவதுண்டு. அதில் காதல், விவாகரத்து போன்ற விஷயங்கள் தான் அதிகம் பேசப்படும்.
தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரகுபீர் யாதவ் மீது அவரது மனைவி பூர்ணிமா கார்கே 10 கோடி ருபாய் நீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். லகான் படத்தில் அதிகம் பிரபலம் ஆனவர் தான் ரகுபீர்.
இவர்களுக்கு திருமணம் 1988ல் நடைபெற்றுள்ளது, ஆனால் 95ல் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அறிந்து மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
அப்போது இருந்தே அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 30 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்தநிலையில் ரகுபீர் 10 கோடி ருபாய் ஜீவனாம்சம் தரவேண்டும் என மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.