வாலு இன்று வெளியாவதுதான் தமிழ் திரையுலகின் ஹாட் டாபிக். திரையுலகின் அத்தனை பிரச்சனைகளையும் ஒருங்கே சந்தித்த படம் அல்லவா. சிம்புவின் முன்னாள் காதலியும், வாலு நாயகியுமான ஹன்சிகா நேற்று சிம்புக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
“கடைசியாக வாலு படம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இது ஒரு நீண்ட பயணமாக அமைந்திருக்கிறது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வளவு நாட்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. இவருடைய கடின உழைப்பை பாராட்டுகிறேன்.
சிம்புவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இப்படத்திற்காக உங்களுடைய வலி, தியாகம், கடின உழைப்பு என அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கான வெகுமதி கிடைக்கவுள்ளது.
விஜய், டி.ஆர், ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இல்லையென்றால் இப்படம் வெளியாவதற்கு சாத்தியம் இல்லை. இவர்கள் அனைவரும் படத்தை ஊக்குவிக்கவும், ஆதரவாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் ” என அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.