நைஜீரியா நாட்டில் ஒலுபேத் அடகோயா(57) தனது மனைவி பசித்த நேரத்தில் ஒருவேளை உணவையும் கொடுப்பதில்லை என காரணம் கூறி அவரை சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளார்.
ஒலுபேத் மிகவும் பசித்து, களைப்புடன் சாப்பிட்ட வரும்போதெல்லாம் அவரது மனைவி வெகுநேரம் கழித்து உணவளிப்பதுதான் விவாகரத்துக்கான முக்கிய காரணமாக குறிப்பிட்டிருந்தார்.
ஒலுபேத்தின் மனைவி தனது கணவர் வேறு யாரையோ திருமணம் புரிய விரும்புவதால்தான் என்னை விவாகரத்து செய்ய முயற்சிக்கிறார், அவர் கூறுவதுபோல எதுவும் நடக்கவில்லை என நொந்துபோனார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிமன்றம் முதலில் விவாகரத்து வழங்க மறுத்து, பலமுறை இவர்களை ஒன்றுசேர்க்க செய்த முயற்சிகள் அனைத்தும் பாழாகிப்போனது.
இதையடுத்து, இருபத்தைந்து ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த அந்த தம்பதியர் தற்போது விவாகரத்தின் மூலம் பிரிந்து விட்டனர்.
இதுமட்டுமின்றி இன்னும் பல வித்தியாசமான வழக்குகள் நைஜீரியா நாட்டின் நீதிமன்றங்களில் அவ்வப்போது வந்து குவிகின்றன. கடந்த 2008-ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியதாரர் தனது 86 மனைவியரில் 82 பேரை ஒருசேர விவாகரத்து செய்துள்ளார்.
இன்னொரு வழக்கில், திருமணம் முடித்த சில மணி நேரங்களில் 32 வயது வியாபாரி தனது மனைவியை விவாகரத்து செய்ய அவரது மனைவி தனது பின்னழகை நேர்த்தியாக காண்பிப்பதற்காக கூடுதலாக அணிந்திருந்த ‘ஷேப்பிங்’ உபகரணம் காரணமாக அமைந்திருந்தது.
இன்னொரு 40 வயது கணவன் ‘எனது மனைவியை திருமணம் செய்த ஐந்து ஆண்டுகளாக நான் அடிக்க நினைக்கும்போதெல்லாம், அவளது குடும்பத்தார் வந்து அவளை காப்பாற்றுவது’ விவாகரத்துக்கு காரணமாக கூறுகிறார்.
இதுபோன்ற விசித்திரமான விவாகரத்து வழக்குகளை தொகுத்து அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.