சினிமா பிரபலங்கள் சிலரின் சொந்த வாழ்க்கை விசயங்கள் பொது தளத்தில் பேசி சிலர் சர்ச்சைகளை உண்டாக்குவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
அண்மையில் மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகையும் நடன கலைஞருமான தாரா கல்யாண் தன் மகள் சௌபாக்யாவுக்கு வெங்கட் என்பருடன் கடந்த மாதம் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார்.
கணவரை இழந்த தாரா கல்யாண் தன் மகளுடன் இணைந்து டிக் டாக்கில் செய்து வீடியோ வைரலாகி பெரும் ரசிகர்கள் எண்ணிக்கை பெற்றார்.
இந்நிலையில் சிலர் தாராவுக்கு மருமகன் வெங்கட் உடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது, அதனால் தான் வெங்கட்டை தன் மகளுக்கு திருமணம் முடித்துள்ளார் என அசிங்கமாக பேசியுள்ளனர்.
இதனால் மன வேதனையடைந்த தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் ஒரு தனி பெண்ணாக தைரியத்துடன் குருவாயூரப்பனை துணை கொண்டு மகளின் திருமணத்தை நடத்தியுள்ளேன்.
கல்யாண வீடியோ கிளிப்பை போட்டோ செய்து வைரலாக்கியுள்ளார்கள். என்னை சோதிக்கிறீர்கள், ஆண்டவனுக்கு தெரியும். உங்கள் மனம் என்ன கல்லா?
நான் மன்னிக்கவே மாட்டேன். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்களும் மனிதர்கள் தான். பெண்மை பற்றி தவறாக பேசுகிறீர்களே? உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா, நீங்கள் பெண் வயிற்றில் பிறக்கவில்லையா?… ஒரு பெண்ணை வேதனை படுத்தும் அளவிற்கு தான் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீரா? நீங்கள் செய்து நான் உட்பட பலரையும் வேதனையாக்கியுள்ளது,
மேலும் சக்தி வாய்ந்த சமூக வலைதளத்தை நல் விசயங்களுக்காக பயன்படுத்துங்கள், மற்ற குடும்பங்களை கெடுக்காதீர்கள் என பேசியுள்ளார்.
View this post on Instagram