வருவாய்க்கு விதிக்கப்படும் டி.டி.எஸ். வரியை ரத்து செய்ய வலியுறுத்தும் விதமாக வருகிற 27ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடப்போவதில்லை என திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறுகிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
தமிழ்த் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில், “படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீதம் டி.டி.எஸ். வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வருகிற 27-ந்தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை வாங்கி வினியோகிப்பதில்லை என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் டி.டி.எஸ். வரியை நீக்கும் வரை நடை முறையில் இருக்கும்” என்று தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளதாக விவரிக்கிறது இச் செய்தி.