திரைப்பட பாணியில் ஒரு திருட்டு சம்பவம் விமான நிலையத்தில் அரங்கேறி உள்ளது. இந்தியாவில் இல்லை லத்தீன் அமெரிக்க தேசமான சிலியில்.
கைகளில் ஆயுதங்களுடன் வந்த திருட்டு கும்பல், கண நேரத்தில் ஏறத்தாழ 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருடி சென்றுள்ளது.
வெளிநாட்டிலிருந்து டாலர்களாகவும், யூரோகளாகவும் 15 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பணம் விமானம் மூலம் சிலி வந்துள்ளது.
இது சிலியில் உள்ள ஒரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணம். இதனைத் தெரிந்து கொண்ட திருட்டு கும்பல், கைகளில் ஆயுதங்களுடன் விமானநிலையத்தில் உள்ள கிடங்குக்குச் சென்று அந்த பணத்தைத் திருடி உள்ளது. பின் இந்த திருட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைத் தனியாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, அதனையும் எரித்துவிட்டது.