உலகிலேயே முதல் முறையாகப் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீர் சரிவு உள்ளது என நியூயார்க் ஆளுநர் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் பிரோன்எக்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயது பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புலி சகோதரி மற்றும் இதனுடன் தொடர்பிலிருந்த மற்ற 2 புலிகள், 3 சிங்கம் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சில நாட்களாக இருமல் இருக்கிறது. தொடர்ந்து கொரோனா அறிகுறிகள் இருப்பதால், இந்த விலங்குகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
சில புனைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என வனவிலங்கு பூங்காவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே வனவிலங்கு நிபுணர்கள் சிலர் காட்டில் வாழும் விலங்குகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த பூங்காவில் உள்ள அனைத்து புலிகளும் ஒருவிதமான வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்படுவதால் அனைத்து விலங்குகளும் தீவர கண்காணிப்பில் உள்ளனர்.