கொரோனாவால் இந்தியாவில் தேசியளவிலான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சினிமா பிரபலங்களும் அனைத்து மக்களை போலவே வேலைக்கு செல்ல முடியாமல், படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அண்மையில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் வீட்டில் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஹிந்தி சினிமாவை சேர்ந்தவர் நடிகர் இர்ஃபான் கான். ஆஸ்கர் மேடை வரை சென்ற லைஃப் ஆஃப் பை என்ற படத்தின் ஹீரோ இவர் தான்.
ஹிந்தியில் 2012 ல் வெளியான பான் சிங் தோமர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றதும் இவரின் மற்றொரு சாதனை.
பல படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தன் அம்மா சாயிதா பேகம் இறந்த துக்கத்தில் உள்ளார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு அவரின் அம்மா கடந்த கடந்த சனிக்கிழமை இறந்துள்ளார்.
மேலும் ஊரடங்கால் ஜெய்ப்பூரில் மாட்டிக்கொண்ட இர்பானால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி சடங்கு நிகழ்வை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பார்த்து கண் கலங்கியுள்ளார்.