கொரோனா வைரஸ் பலிகளும், பாதிப்புகளும், ஊரடங்கு சிக்கல்களும் தொடரும் இந்த நேரத்தில் சில விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு தாய் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என்ற பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘இந்த இரண்டு பெயர்கள், கொரோனா வைரசுக்கு எதிராக மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் முக்கிய விஷயங்களாகும். இதுதான் சிறந்த பெயர்களாக இருக்க முடியும் என்று எங்கள் குழந்தைகளுக்கு இவற்றைத் தேர்வு செய்தோம். அதனால்தான் எங்கள் ஆண் குழந்தைகளுக்கு இந்த பெயரையே சூட்டியுள்ளோம்’ என்றனர்.