ஸ்பெயினின் பார்சிலோனா பல்கலைக்கழகம் ஜுன் 26ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2019ஆம் ஆண்டு மார்சில் சேகரிக்கப்பட்ட கழிவு நீரின் மாதிரியை அண்மையில் சோதனை செய்ததில் கொரோனா வைரஸ் இருந்துள்ளதை இப் பல்கலைக்கழகத்தின் தலைமையிலுள்ள ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன், இவ்வாண்டு ஜனவரி 15 ஆம் நாள் சேகரிக்கப்பட்ட கழிவு நீரில் இக்குழுவினர் கொரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், ஸ்பெயினில் முதலாவது கொரோனா வைரல் பாதிப்பு பிப்ரவரி 25 ஆம் நாள் தான் என்று தெரிவிக்கப்பட்டது.
இக்குழுவுக்கு தலைமை தாங்கும் உயிரியல் பேராசிரியர் கூறுகையில், பார்சிலோனா நகரின் சுற்றுலாத் துறை பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. அங்கு செல்லும் பயணிகள் அதிகம். மற்ற நாடுகளிலும் இத்தகைய நிலைமை
நிலவுவதற்கு வாய்ப்புண்டு என்று இந்த ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுவதாக கூறினார்.