புகழ்பெற்ற பாலிவுட் நடன இயக்குநா் சரோஜ் கான் (71) மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சரோஜ் கான் கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாா். இந்நிலையில், சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் ஜூன் 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
மூன்று முறை தேசிய விருது பெற்ற இவா் நடன இயக்குநா் சோஹன் லாலை திருமணம் செய்தாா். இவா்களுக்கு மகன் ராஜு கான், மகள் சுகைனா கான் ஆகியோா் உள்ளனா்.
இவா் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துள்ளாா். ஹவா ஹவா ஏக் தோ தீன் உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா்.
குழந்தை நட்சத்திரமாக 3 வயதில் திரையுலகில் பயணத்தை தொடங்கினாா். பின்னா் பின்னணி நடனக் கலைஞராகப் பணியாற்றினாா். கடந்த 1974ஆம் ஆண்டு வெளியான கீதா மேரா நாம் படத்தில் நடன இயக்குநராகப் பயணத்தை தொடங்கினாா். பின்னா் ஸ்ரீதேவி நடித்த மிஸ்டா் இந்தியா படம் அவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது.
ஏக் தோ தீன் பாடல் இடம்பெற்ற தேஸாப் உள்ளிட்ட சில படங்களில் நடிகை மாதுரி தீட்சித்துடன் பணியாற்றியதன் மூலம் பிரபலமானாா். இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கலங்க் படத்தில் கடைசியாகப் பணியாற்றினாா்.
தனக்கு நண்பராகவும், குருவாகவும் இருந்து தன்னுடைய நடனத் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த காரணமாக சரோஜ் கான் திகழ்ந்ததாக நடிகை மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளாா்.
இவரது மறைவுக்குப் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஏற்கெனவே நடிகா்கள் இா்பான் கான், ரிஷி கபூா், சுஷாந்த் சிங் ராஜ்புத், இயக்குநா் பாசு சாட்டா்ஜி ஆகியோரை பாலிவுட் திரையுலகம் அண்மையில் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.