சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 19 இலட்சத்து 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 19 இலட்சத்து 41 ஆயிரத்து 774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 743 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 இலட்சத்து 92 ஆயிரத்து 954 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 196 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 68 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 30,97,075
பிரேசில் – 16,74,655
இந்தியா – 7,19,665
ரஷ்யா – 6,94,230
பெரு – 3,09,278
சிலி – 3,01,019
ஸ்பெயின் – 2,99,210
இங்கிலாந்து – 2,86,349
மெக்சிகோ – 2,61,750
ஈரான் – 2,45,688
இத்தாலி – 2,41,956
பாகிஸ்தான் – 2,34,509
சவுதி அரேபியா – 2,17,108
தென் ஆப்பிரிக்கா – 2.15,855
துருக்கி – 2,07,897