பாஸ்கர் த ராஸ்கல் படத்தையடுத்து மம்மூட்டி மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ள படம் சோலோமொண்டே கூடாரம். மம்மூட்டி வக்கீலாக நடிக்கும் இப்படத்தை இயக்க உள்ளார் ஏ.கே.சஜன்.
படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் வாசுகி. மதம் மாறி திருமணம் செய்த இரு ஜோடிகள் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகள் என கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கால இளைஞர்களை வெகுவாக கவரும் விதம் காட்சிகள் இடம்பெற உள்ளனவாம்.
நயன்தாராவும் , மம்மூட்டியும் மீண்டும் இணைந்து நடிக்கும் இப்படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. ஒரே சமயத்தில் அப்பா மகன் என இருவரும் முன்னணி ஹீரோக்களாக இருப்பது இதுவே முதல் முறை என்றே கூறலாம்.