உயிரை உறுக்கும் பெண்ணே – உன்
கண்ணில் என்ன காந்தமோ…….
கண்ணை கிள்ளும் கனவே – உன்
முகத்தில் என்ன மோகமோ……
வெடிக்கத்துடிக்கும் எரிமலை – கூட
உன்னழகில் அகிம்சையானது
சுழன்று வரும் சூறாவளி – கூட
உன் சிரிப்பில் தென்றலானது
பொளர்ணமியே………………
பொறாமை கொள்ளும் பெண்ணே!
(நீ) பூமிக்குள் வளம் வரும் புது நிலவோ……
பூஞ்சோலை தேடி ஏங்கும்,
புதுப் பூவே……
பூக்களின் இளவரசி நீதானோ………
மனம் மயக்(ங்)கும் மல்லிகை கூட
மயங்கும் உன் வாசம்…………
மார்கழி குளிரில் என் சுவாசமே……….
மின்னல் கூட தடுமாறும் – உன் பார்வை
என் உலகின் ஒளிதானோ…………..
முஹம்மது பஸ்லி
வெலிகம.