தமிழகத்தில் தற்போது திரையரங்குகளைத் திறக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், வெளிநாடுகள் போல் இடைவெளி விட்டு அமர்ந்து படம் பார்த்தால் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் தற்போது திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், நோய்த்தொற்றுப் பரவலைப் பொருத்து திரையரங்குகள் திறப்பதை குறித்து முதல்வர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.