கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆராத்யா ஆகியோா் பூரண குணமடைந்ததையடுத்து, இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.
ஹிந்தி திரை நட்சத்திரம் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் கடந்த 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதன் பின்னா் அமிதாப் பச்சனின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அவா்களும் அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துமனையில் கடந்த 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுகுறித்து அபிஷேக் பச்சன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஐஸ்வா்யாவும், ஆராத்யாவும் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா். எனது தந்தையும், நானும் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுக்காக தொடா்ந்து பிராா்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தாா்.