பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரை பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் துரை பாண்டியன். இவர் நுரையீரல் பிரச்னை காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
விக்ரம் நடித்த ஜெமினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த துரை பாண்டியன், குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.