வருடாவருடம் டன் கணக்கில் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் அடித்து, சாலையையே ரத்தக்களறி ஆக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் 70-வது ஆண்டு தக்காளி திருவிழாவை சற்று கூடுதல் உற்சாகத்தோடே கொண்டாடினர்.
1945-ம் ஆண்டு தொடங்கிய இந்த தக்காளி திருவிழா, ஸ்பெயினின் பியுனோல் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த வருடம் நடந்த 70-வது ஆண்டு விழாவைக் காண, உலகம் முழுவதிலும் இருந்து, லட்சக்கண்க்கான சுற்றுலா பயணிகள், பியுனோல் நகருக்கு படையெடுத்தனர். அதுவும் இந்த வருடம் முழுக்க செல்பி மயம்தான். இதற்காகவே தண்ணீரால் பாதிக்கப்படாத ஸ்மார்ட்போனை பலர் வாங்கியிருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவர்களின் கொண்டாட்டத்தை நீங்களே பாருங்கள்: