ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசத்தில் பனி யுகத்தில் வாழ்ந்த கரடி ஒன்றின் உடல் எந்த விதமான சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு ரஷ்யாவில் உள்ள லியாக்கோவ்ஸ்கி தீவுகளில் உறைபனிக்கு அடியில், கலைமான்கள் மேய்ப்பர்களால் இந்த கரடியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
22,000 ஆண்டுகளில் இருந்து 39,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செங்கரடி இனத்தைச் சேர்ந்ததாக இந்தக் கரடி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதன் பற்கள் மற்றும் மூக்கு ஆகியவை துளிகூட சேதமில்லாமல் நல்ல நிலையில் இருக்கின்றன.
ரஷ்யாவிலுள்ள நார்த் ஈஸ்டர்ன் ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் இந்த கரடியின் உடல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாய்க்குட்டி ஒன்றின் உடல் சைபீரிய உறைபனியில் கடந்தாண்டு இதேபோல நல்ல நிலையில் கண்டெடுக்கப்பட்டது.