மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஒட்டி நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்ன சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
கடந்த வாரம் நடந்த நீட் தேர்விற்கு முன்பாக, தேர்வு எழுதவிருந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, “கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத வேண்டுமென உத்தரவிடுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் “நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.