நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும் நடைபெறும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்துகொண்டார். இம்முறை சீசன் 4 போட்டியாளர்கள் குறித்து என்னென்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சினிமாவில் நடிகைகளுக்கு நேரும் பாலியல் தொல்லை சம்பவங்கள் தற்போது மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளனர்.
ஹிந்தி சினிமாவின் நடிகரும் தயாரிப்பாளருமான அனுராக் கஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது நடிகை கஸ்தூரியிடம் ஒருவர் “உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இப்படி நடந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பீர்களா” என கேட்க அதற்கு அவர் எனக்கே இது போல நடைபெற்றுள்ளது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.