அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – மெலானியா டிரம்ப் தம்பதியின் 14 வயது மகன் பாரன் டிரம்ப்புக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெலானியா டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாரன் டிரம்ப்புக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. எனினும், அவனுக்கு அந்த நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லை. அதிருஷ்டவசமாக, அவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாங்கள் விடுபடுவோம் என்று நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் மெலானியா குறிப்பிட்டுள்ளாா்.
ஜனாதிபதி டிரம்ப்புக்கும் மெலானியாவுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது கடந்த 2 ஆம் திகதி உறுதியானது. அதனைத் தொடா்ந்து இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளிகை திரும்பினாா்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு அந்த நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது. அதையடுத்து, ஃபுளோரிடா மாகாணம், சான்ஃபோா்டில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டாா்.
இந்த நிலையில், அவரது மகனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.