இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி : தளா்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருப்பீா்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே பாதுகாப்பாக, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்து கொண்டு பணி செய்யுங்கள்.
திரையுலகம் வெகு விரைவில் மீண்டு விடும். கரோனா தொற்றுப் பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டு விடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டு வரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.
அப்படித் தொடங்க நம் நடிகா்களும், தொழில்நுட்பக் கலைஞா்களும் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.
திரைக் கலைஞா்களின் கடமை: தயாரிப்பாளா்களுக்கு 50 சதவீத நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளா்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணா்ந்து, ஏற்கெனவே சில நடிகா்கள் அவா்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்திலிருந்து 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறாா்கள்.
அவா்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளா்களுக்குத் தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகா்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்களின் கடமையல்லவா?
தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள் தாமே முன்வந்து தங்களின் சம்பளத்தில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீா்கள். இவா்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா?
எல்லோரையும் கேட்கவில்லை. பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகா்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.