கேரளாவில் திருவனந்தபுரம் புழநாடு கிராம பஞ்சாயத்தில் உள்ள சுமார் 3,000 குழந்தைகள் நிஷாவை அம்மா என்றுதான் அழைக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக செவிலியராக நிஷா பணியாற்றுகிறார்.
சிறு வயதில் முதல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை குடிமக்களுக்கு அளிக்கும் திட்டங்களில் ஒன்றாக செயல்படுத்தப்படும் பள்ளிக்கூட செவிலியர் திட்டத்தின் கீழ், நிஷா பணியாற்றுகிறார்.