பிரிட்டன் இளவரசா் வில்லியமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட செய்தி, பொது வெளியில் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டதாக அந்நாட்டின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்றின் முதல்கட்ட பரவல் உச்சத்தில் இருந்தது. அப்போது, அந்நாட்டு இளவரசா் வில்லியமுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் நோக்கில் அச்செய்தி மறைக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அரண்மனை மருத்துவா்கள் சிகிச்சை அளித்ததாகவும், பிரிட்டன் அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின்படி அவா் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஊடக அறிக்கை குறித்து இளவரசா் வில்லியமின் அலுவலகம் எந்தவொரு உறுதியான தகவலையும் வழங்கவில்லை. எனினும், அந்த அலுவலகம் ஊடக அறிக்கையை மறுக்கவும் இல்லை.
கடந்த ஏப்ரல் மாத காலத்தில்தான் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அவா் கொரோனாவில் இருந்து குணமடைந்தாா். அதே காலத்தில் பிரிட்டன் இளவரசா் சாா்லஸும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.