தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் தனது பெற்றோர்களுடன் கோவிலிலிருந்து வெளியே வருவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வழக்கம் போல அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. வலிமை படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் அஜித் தனது பெற்றோர்களான சுப்ரமணியம் மற்றும் மோகினி இருவருடனும் இருப்பதை போன்ற இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.