சுசாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் உரிமையாளர் மீது ரூ. 500 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
ஹிந்தி நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக விசாரித்து வரும் சிபிஐ, ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் தனியாக விசாரித்து வருகின்றனா்.
எஃப்.எஃப். நியூஸ் என்கிற யூடியூப் சேனலை பிகாரைச் சேர்ந்த ரஷீத் சித்திக் என்பவர் நடத்தி வருகிறார். பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் மரணம் தொடர்பாகத் தொடர்ந்து செய்திகளைத் தந்ததால் அவருடைய சேனலுக்கு ஆதரவாளர்கள் அதிகமாகியுள்ளார்கள். இதன்மூலம் அவருடைய வருமானமும் எகிறியுள்ளது.
சுசாந்த் சிங் மரண வழக்கில் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அவருடைய மகன் ஆதித்யா தாக்கரேவும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியிட்டு அதற்காகக் கைது செய்யப்பட்டார்.
சுசாந்த் சிங்கின் காதலி ரியா கனடாவுக்குத் தப்பிச் செல்ல பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உதவியாக தனது யூடியூப் சேனலில் செய்தி வெளியிட்டார் ரஷீத் சித்திக். ஆதித்யா தாக்கரே மற்றும் மும்பை காவல்துறை ஆகியோரிடம் ரகசியமாகக் கூட்டம் நடத்தியதாகவும் தோனி படத்தில் நடித்ததற்காக சுசாந்த் சிங் மீது அக்ஷய் குமார் அதிருப்தியில் இருந்ததாகவும் செய்தி வெளியிட்டது தற்போது சிக்கலை வரவழைத்துள்ளது.
தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்ட காரணத்துக்காக ரஷீத் சித்திக் மீது ரூ. 500 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் அக்ஷய் குமார்.