முக கவசம் அணியாவிட்டால், முன்பு 500 ரூபாயாக இருந்து வந்த அபராத தொகையை, நேற்று (19 நவம்பர் 2020, வியாழக்கிழமை) 2,000 ரூபாயாக டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதோடு தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை ஒதுக்கீடு செய்யவும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில், 80% ஐசியூ படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வர் கூறியுள்ளார். இது நவம்பர் 19 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதே போல, தனியார் மருத்துவமனைகளில், ஐசியூ அல்லாத சாதாரண படுக்கைகளில், முன்பு 50 சதவிகிதம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொண்டு இருந்ததை, தற்போது 60 சதவிகிதமாக அதிகரிக்குமாறும் டெல்லி அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.