ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிக்க, உலகின் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அவற்றில் முன்னதாக அமெரிக்காவின் பிபைசர், மாடர்னா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகள் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 95% வரை வெற்றி இலக்கை எட்டியுள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றியடைந்துள்ளதாக செவ்வாயன்று தகவல் வெளியாகியுள்ளது.