சூடான் நாட்டின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முன்னணி அரசியல் தலைவருமான சாதிக் அல் மஹ்தி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை பலியானார்.
சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி. 84 வயதான சஹ்தி 1989 ஆம் ஆண்டு சூடான் குடியரசுத் தலைவரால் கொண்டு வரப்பட்ட ராணுவ ஆட்சியால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.
எனினும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருந்த சஹ்தி கடந்த அக்டோபர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சஹ்தி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.