நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள். மீதம் இருப்பவர்களை வைத்து நடக்கும் பிக்பாஸ் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக பார்வையாளர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள், அவர்களால் ஒரு பிரயோஜனும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்கு ரிப்ளை செய்துள்ள நடிகர் பிரேம்ஜி அமரன், ‘நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பரத், நீங்க போக ஆசைப்படுகிறீர்களா என்று பிரேம்ஜி கிட்ட கேட்க, அதற்கு பிரேம்ஜி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே… என்று கூறியிருக்கிறார்.