அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட எட்வர்ட் ஸ்னோடன். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பயந்து 2013ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இருந்து வருகிறார். அவர் அண்மையில் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். ஒசாமா தற்போதும் அமெரிக்காவின் சிஐஏ ஊழியர்கள் பட்டியலில் உள்ளார்.
ஒசாமா தற்போது எங்கு வசிக்கிறார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் 2013ம் ஆண்டு அவர் ஒரு வில்லாவில் தனது 5 மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து வந்தார்.
ஒசாமாவின் உடலையும் யாரிடமும் அவர்கள் காண்பிக்கவில்லை. இவைகளை பயன்படுத்தி தான் ஒசாமாவை தலைமறைவாக்கி உள்ளனர். தாடி இல்லாமல், ராணுவ உடையில் இருப்பதால் அவரை யாரும் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. போலியான ஆவணங்களை வெளியிட்டதால் அவர் இறந்து விட்டதாக அனைவரும் நம்பி விட்டனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஒசாமா உயிருடன் இருப்பதற்கான பல ஆதாரங்களையும், அமெரிக்கா ஒசாமாவுக்கு உதவி வருவதற்கான ஆதாரங்கள் அடங்கிய புத்தகத்தை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.