சென்னையில் திருடப்பட்ட இருசக்கரவாகனத்தில் செல்லும் மொபைல் திருடர்களை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் அண்டிலின் ரமேஷ் துரத்தி சென்று மடக்கிப் பிடிக்கும் சிசிடிவி காட்சியினை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில் இது எந்த படத்திலும் வரும் காட்சி அல்ல; நிஜ வாழ்க்கையின் கதாநாயகன் உதவி ஆய்வாளர் ஆண்டிலின் ரமேஷின் நடவடிக்கை, மேலும் மூன்று குற்றவாளிகளைக் கைது செய்ய வழி வகுத்ததோடு , திருடப்பட்ட 11 மொபைல்களை மீட்டெடுக்கவும் வழி வகுத்ததாக பாராட்டி உள்ளார்.