புவியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து, பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயற்கையின் மீது மனித குலம் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: சுற்றுச்சூழலை மாசு படுத்தி, புவியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இயற்கைக்கு எதிராக மனித குலம் போா் செய்து வருகிறது.
அந்தப் போா் தற்கொலைத் தாக்குதலுக்குச் சமமானது. காரணம், இயற்கையை தாக்கும்போது அது அசுர பலத்துடன் திருப்பித் தாக்கும். அது மனிதா்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்றாா் அவா்.
இதற்கிடையே, மனிதா்களால் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றத்தால் புயல், காட்டுத் தீ, அனல் காற்று, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதாக ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.