சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸூக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கபட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 48 இலட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 6 லட்சத்து 12 ஆயிரத்து 962 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 853 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 4 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 124 பேருக்கும், ரஷியாவில் 25 ஆயிரத்து 345 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 6 கோடியே 48 லட்சத்து 1 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 கோடியே 84 லட்சத்து 4 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 92 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 4 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 14 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 1,42,99,367
இந்தியா – 94,99,414
பிரேசில் – 64,36,650
ரஷியா – 23,47,401
பிரான்ஸ் – 22,44,635