திருவான்மியூரில் கடல் அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலியானார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கடற்கரையில், மகள் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென ராட்சத அலை அவரை இழுத்துக் சென்றது.
ராட்சத அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற கடலில் குதித்த தந்தை கடல் அலையில் சிக்கிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கடலில் குதித்து மகளை மீட்டனர். தந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தந்தையின் உடல் கரை ஒதுங்கியது.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.