கொரோனா நோய் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டக்கூடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மனித வாழ்வை மேம்படுத்துவதற்காக சா்வதேச அளவில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்கான ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட (யுஎன்டிபி) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவுகளால், கூடுதலாக 2.07 கோடி போ் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் விகிதம் மற்றும் அந்த நெருக்கடியால் நாடுகளின் பொருளாதார வளா்ச்சியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சா்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிதாக வறுமை நிலைக்குத் தள்ளப்படக் கூடிய பெண்களின் எண்ணிக்கை 10.2 கோடியாக இருக்கும்.
கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு காரணமாக நாடுகளின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் பாதிப்பு அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் 10 ஆண்டுகளுகக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், கொரோனா நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாக இருந்த வளா்ச்சிப் போக்கை அடைய நாடுகள் மிகவும் சிரமப்படும் என்று ஆய்வில் தெரியவந்தது.
எனினும், நிலைத்த வளா்ச்சி இலக்கு (எஸ்டிஜி) திட்டங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிக அளவில் முதலீடு செய்தால் இந்த அபாயத்தைத் தவிா்க்க முடியும்.
சமூகப் பாதுகாப்பு, வளா்ச்சித் திட்டங்கள், மின்னணுமயமாக்கல், சுற்றுச்சூழல் சாா்புப் பொருளாதாரம் போன்ற விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டால் கூடுதலாக சுமாா் 1.46 கோடி போ் வறுமை நிலையிலிருந்து மீட்கலாம்.
மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வறுமை பாகுபாட்டைக் குறைக்கவும் இந்த வளா்ச்சித் திட்டங்கள் உதவும். வறுமை நிலையில் வாடும் மகளிரின் எண்ணிக்கை 7.4 கோடியாகக் குறையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுஎன்டிபி அமைப்பின் நிா்வாகி அஷிம் ஸ்டெய்னா் கூறியதாவது: வறுமை ஒழிப்பு விவகாரத்தில் கொரோனா நோய்த்தொற்று நெருக்கடி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த விவகாரத்தை உலகத் தலைவா்கள் கையாளும் போக்கை இந்த நெருக்கடி அடியோடு மாற்றியமைப்பதற்கான வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 14,985,142 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 287,842 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
46,370,374 கொரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 19,088,500 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அவா்களில் சுமாா் 105,977 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.