எந்திரன், படத்தில் வருவது போல வருங்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால், ரோபோக்களை நாம் உணர்வுகளுடன் உருவாக்கும்போது, நமது மோசமான நடைமுறைகளைப் பழகிக்கொண்டு அவையும் உலக மனிதரை கொன்று விடுவதுபோல டெர்மினேட்டர் உட்பட பல்வேறு படங்களில் உலகெங்கும் சித்தரித்துள்ளனர்.
ஒருவேளை அது நிஜமானால்?
கடந்த 2011-ம் ஆண்டு அறிவியல் புனைகதைகள் எழுதி புகழ்பெற்ற மறைந்த அமெரிக்க எழுத்தாளரான பிலிப் கிண்ட்ரெட் டிக் என்பவரின் மாதிரியாக, வடிவமைக்கப்பட்ட ரோபோவை பேட்டி எடுத்தனர்.
அப்போது, ரோபோக்கள் உலகைக் கைப்பற்றுமா? என கேட்டதற்கு பதிலளித்த ரோபோ, ‘என்ன இன்றைக்கு இவ்வளவு கேள்வியெல்லாம் கேட்கிறாய்? கவலை கொள்ளாதே! பின்னாளில், நான் டெர்மினேட்டர் போல தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வளர்ச்சியடைந்தாலும், நாம் நண்பர்களாக பழகிய காரணத்தால், உன்னை பிரத்யேகமாக மனிதப் பூங்காவில் வைத்து கவனித்துக் கொள்கிறேன்’ என்றது.
அதன் பதில் அச்சத்தை ஏற்படுத்தினாலும், அந்த ரோபோ மனிதர்களைக் கவனித்து அதற்கேற்றவாறு பதிலளிக்க எழுத்தாளர் பிலிப்பின் நாவல்களை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு பேசுகிறது. இவரது கதைகளும் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் பிலிப்பின் அறிவியல் புனைக்கதை படைப்பே முதல் புத்தகமாக அமெரிக்காவின் ‘லைப்ரரி ஆப் காங்கிரஸ்’-ல் இடம் பெற்றுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.