ராய்லட்சுமி தற்போது ‘சவுகார்பேட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். சென்னையில் நடக்கும் திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ராய்லட்சுமி பேய் வேடத்தில் நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மந்திரவாதியாகவும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். வடிவுடையான் இயக்கி வரும் இப்படத்தில் விவேக், அப்புக்குட்டி, சரவணன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த சண்டைக்காட்சியில் ராய் லட்சுமி, டூப் போடாமல் நடித்துள்ளார். ஒரு பேய் பறந்து பறந்து சண்டை போடும் காட்சி என்பதால், இதில், ராய் லட்சுமியின் இடுப்பில் ரோப் கயிறு கட்டி, கிரேன் மூலம் தூக்கியுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ராய் லட்சுமி விபத்தில் சிக்கினார். இதனால் அவரது கையில் லேசாக அடிபட்டது. இருப்பினும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.
இதுகுறித்து ராய் லட்சுமி கூறும்போது, படப்பிடிப்பின் போது எனது கையில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. அடிபடாமல் ஒரு சண்டைக்காட்சியில் என்னால் நடிக்க முடியாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.