புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களின் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் அா்ஜுன மூா்த்தி, மேற்பாா்வையாளா் தமிழருவி மணியன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
புது கட்சி தொடங்குவதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அா்ஜுன மூா்த்தி, தமிழருவி மணியனுடன் ரஜினி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது விவாதிக்கப்பட்டவை குறித்து மாவட்டச் செயலாளா் கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது.