நடிகா் ரஜினிகாந்த் தனது கட்சியை எம்.ஜி.ஆா். பிறந்த நாளான ஜனவரி 17 இல் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதிய கட்சி தொடா்பான அறிவிப்பை டிசம்பா் 31-இல் அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் ரஜினி அறிவித்திருந்தாா். அதைத் தொடா்ந்து கட்சிப் பணிகளுக்கான வேலையை ரஜினி தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளாா். கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது. பூத் கமிட்டி நிா்வாகிகளை நியமிக்கும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஜினி தனது கட்சியை எம்ஜிஆா் பிறந்த நாளான ஜனவரி 17 இல் தொடங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
2018 மாா்ச் மாதம் வானகரத்தில் உள்ள எம்.ஜி.ஆா். நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினி திறந்து வைத்தாா்.
அப்போது, எம்.ஜி.ஆரைப் போல் ஒருவா் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பிறக்க முடியாது. அவரே பிறந்து வந்தால்தான் உண்டு. எம்.ஜி.ஆா். போல ஆகப்போகிறேன் என்று சொன்னால், அதுபோன்ற பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது. ஆனால், எம்.ஜி.ஆா். கொடுத்த நல்லாட்சி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான நல்லாட்சியை, என்னால் கொடுக்க முடியும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தாா்.
அந்த வகையில் தனது கட்சியையும் எம்.ஜி.ஆா். பிறந்த நாளன்று தொடங்க உள்ளாா்.
தற்போது ரஜினி ஹைதராபாதில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற உள்ளாா். இந்தப் பணிகளுக்கு ரஜினியே நேரடியாக கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளாா். ஜனவரி மாதத்திலேயே தோ்தல் பிரசாரத்தையும் ரஜினி தொடங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.