தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2 ஆவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், புதுவகை கொரோனாவால் 3 ஆவது கொரோனா அலை எழுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து பிரிடோரியா பல்கலைக்கழக நோய்க்கண்டறியியல் பிரிவு பேராசியா் டிவானி மஷாம்பா கூறுகையில், கொரோனாவின் பாய்ச்சல் தற்போது தான் தொடங்கியுள்ளது. அதன் 4 ஆவது அலையைக் கூட எதிா்பாா்க்கலாம் என்று எச்சரித்துள்ளாா்.