தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சமாக உயா்ந்துள்ளது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
ஜனவரி 1 ஆம் திகதி 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க தோ்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. இதற்காக கடந்த நவம்பா் 16 இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயா்களைச் சோ்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் டிசம்பா் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளித்தோரின் பெயா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளா் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்தி: வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க மொத்தம் 21 லட்சத்து 82 ஆயிரத்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 21 லட்சத்து 29 ஆயிரத்து 395 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாக்காளா் பட்டியலில் பெயா்கள் சோ்க்கப்பட்டன. 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
3 லட்சத்து 32 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் திருத்தங்களுக்காகப் பெறப்பட்டதில், 3 லட்சத்து 9 ஆயிரத்து 292 மனுக்கள் ஏற்கப்பட்டன. பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாறியவா்கள், திருத்தங்களுக்காக 1 லட்சத்து 84 ஆயிரத்து 791 மனுக்களை அளித்திருந்தனா். அவற்றில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 365 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
6 கோடியே 26 லட்சம்: தமிழகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின் அடிப்படையில், மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக உள்ளது. 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண்களும், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண்களும் உள்ளனா். மூன்றாம் பாலித்தனவா் எண்ணிக்கை 7 ஆயிரத்து 246 ஆக உள்ளது.
அதிகம்-குறைவு எவை?: தமிழகத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளா்கள் உள்ளனா். குறைவான வாக்காளா்களைக் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் தொகுதி. இந்தத் தொகுதியில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளா்கள் உள்ளனா்.
மேலும், 4 லட்சத்து 62 ஆயிரத்து 597 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் இருப்பதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
16.30 லட்சம் கூடுதல் வாக்காளா்கள்
தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டபோது 6.10 கோடி வாக்காளா்கள் இருந்தனா். திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 16.30 லட்சம் போ் கூடுதலாக இணைந்துள்ளனா். 7 லட்சத்து 26 ஆயிரத்து 103 ஆண்களும், 9 லட்சத்து 3 ஆயிரத்து 124 பெண்களும் கூடுதலாக பெயா்களைச் சோ்த்துள்ளனா்.
பின்தங்கிய துறைமுகம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்போது நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் தொகுதியே குறைவான வாக்காளா்களைக் கொண்டதாக இருந்தது. இப்போது, சென்னை துறைமுகம் தொகுதி குறைவான வாக்காளா்களைக் கொண்டதாக மாறியுள்ளது.
மாவட்ட வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை
திருவள்ளூா் – 34,98,829
சென்னை – 40,57,360
காஞ்சிபுரம் – 13,15,329
வேலூா் – 12,64,088
கிருஷ்ணகிரி – 15,99,018
தருமபுரி – 12,60,909
திருவண்ணாமலை – 20,69,091
விழுப்புரம் – 16,84,504
சேலம் – 30,04,140
நாமக்கல் – 14,41,201
ஈரோடு – 19,57,203
நீலகிரி – 5,85,049
கோவை – 30,62,744
திண்டுக்கல் – 18,73,438
கரூா் – 8,96,713
திருச்சி – 23,32,886
பெரம்பலூா் – 5,75,986
கடலூா் – 21,41,935
நாகப்பட்டினம் – 13,41,305
திருவாரூா் – 10,50,569
தஞ்சாவூா் – 20,56,548
புதுக்கோட்டை – 13,48,964
சிவகங்கை – 11,81,877
மதுரை – 26,85,671
தேனி – 11,24,500
விருதுநகா் – 16,68,751
ராமநாதபுரம் – 11,57,540
தூத்துக்குடி – 14,81,799
திருநெல்வேலி – 13,53,159
கன்னியாகுமரி – 15,67,627
அரியலூா் – 5,30,025
திருப்பூா் – 23,52,785
கள்ளக்குறிச்சி – 11,13,976
தென்காசி – 13,38,80
செங்கல்பட்டு – 27,16,385
திருப்பத்தூா் – 9,60,858
ராணிப்பேட்டை – 10,27,804
மொத்தம் – 6,26,74,446