சென்னை எழும்பூரில் செயல்படும் மனித உரிமைகள் கழகம் என்ற கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான ராதாரவி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், ‘தனியார் இணையதள தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த ராதாரவி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.